சென்னை சென்ட்ரலில் குழந்தை கடத்தல்- 4 மணி நேரத்தில் மீட்பு
1 min read
Kidnapping in Chennai Central- Rescued in 4 hours
14.4.2024
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசியபோது போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கார்த்திக், செல்வம் என்ற இருவரை எண்ணூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.