July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன்

1 min read

Seizure of Rs 4 crore: Tambaram police summon Nayanar Nagendran

14.4.2024
கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் போலீசாரும் இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.