July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

வாசுதேவநல்லூரில் அரசு பேருந்துகள் மீது கல் வீசிய 4 பேர் கைது

1 min read

4 people arrested for throwing stones at government buses in Vasudevanallur

29.5.2024
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 20 ம் தேதி நள்ளிரவில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ்ஸில் கல்வீசி தாக்குதல் நடத்திய நான்கு நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கனாப்பேரி மற்றும் அருளாட்சி ஆகியப் பகுதிகளில் கடந்த 20.05.24 அன்று இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இரு வேறு அரசு பேருந்துகள் மீது இருசக்கர வாகனத்தில் தங்களது முகங்களை மூடிக் கொண்டு வந்த நபர்கள் கல்லால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தும், பேருந்து ஓட்டுனருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.
பேருந்துகளின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது பற்றி அரசு போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் நடத்துனர் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பற்றி விசாரணை மேற்கொண்ட போது வாசுதேவநல்லூர் கிணற்றடி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கார்த்திக் ராஜா, புது காலனி 2வது தெருவை சேர்ந்த பாலாண்டவர் என்பவரின் மகன் தமிழ் ஈஸ்வரன், பெருமாள் என்பவரின் மகன் கருப்பசாமி மற்றும் ராஜா கிருஷ்ணன் என்பவரின் மகன் கண்ணன் ஆகிய நான்கு நபர்கள் மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் நான்கு நபர்களையும் வாசுதேவநல்லூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள.

நீதிபதி அவர்களை 15 காவலில் வைக்க உத்தரவிட்டார் . அதன்படி போலீசார் அந்த 4 நபர்களையும் சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.