“மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்”- தென்காசியில் வெற்றிபெற்ற டாக்டர் ராணி ஸ்ரீகுமார் உறுதி
1 min read
“I will fulfill the demands of the people” – Dr. Rani Sreekumar, who won in Tenkasi, assured
5.5.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட் பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனாலும் திமுக கூட்டணி வேட் பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார். அதிமுக கூட் டணி புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜ கூட் டணி சார்பில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் ஆகிய நான்கு பேருக்கும் இடையேதான் போட்டி நிலவியது.
தென்காசி தொகுதியில் பதிவான வாக்குகள் கொடிக்குறிச்சி யு எஸ் பி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் இருந்து வந்தார். தொடர்ந்து 25 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்தார்.
இந்நிலையில் இறுதியாக 4 லட்சத்து 25 ஆயிரத்து,679 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை விட
1,96,199வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்
இந்த தொகுதியில் இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியும், மூன்றாவது இடத்தை பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியனும், நான்காவது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனும் பெற்றனர்.
இதில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 4 லட்சத்து 25 ஆயிரத்து 679வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டி யிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்குகளும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் இரண்டு லட்சத்து எட்டு ஆயிரத்து 825 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 335 வாக்குகளும், அதனைத் தொடர்ந்து மகேஷ் குமார் 3554 வாக்குகளும், ராமசாமி 3412 வாக்குகளும், உமா மகேஸ்வரி 165 வாக்குகளும், சீதா 200476 வாக்குகளும் ஆறுமுகசாமி 1313 வாக்குகளும், ராஜசேகர் 993 வாக்குகளும், கற்பகவல்லி 6314 வாக்குகளும், பா,கிருஷ்ணசாமி 1350 வாக்குகளும், மூ.கிருஷ்ணசாமி 1833 வாக்குகளும், மன்மதன் 3278 வாக்குகளும், முத்தையா 1457 வாக்குகளும், நோட்டா 17,565 வாக்குகளும் பெற்றனர். தென்காசி தொகுதியில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை தவிர நாம் தமிழர் கட்சி உள்பட 12 வேட் பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ. ராஜா எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை, தென்காசி நகர திமுக செயலாளர் நகர் மன்ற தலைவருமான ஆர்.சாதிர், செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:-
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் வழங்கிய மகத்தான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியினை முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளுக்கு மக்கள் அளித்த பரிசாகவே கருதுகிறேன். இந்த வெற்றியை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கிறேன். இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த திமுக துணை பொதுச் செயலாளர் சுனிமொழி, தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன். அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். பேட்டியின் போது தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் ,தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜா எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்..