June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பாஜக கூட்டணி தலைவராக மோடி தேர்வு

1 min read

Modi chosen as the leader of the BJP alliance

5.5.2024
டெல்லியில் பிரதமரின் இல்லத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தே.ஜ. கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துனர். இதனால் 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, நட்டா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதில், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கு நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர். மேலும், 7 சுயேட்சை எம்.பி.க்கள் உட்பட தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்காத 10 எம்.பி.க்களும் ஆதரவளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இன்று காலையில் 17வது லோக்சபாவை கலைக்க ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று லோக்சபாவை ஜனாதிபதி கலைத்தார்.
பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதம் வழங்கினர். வரும் 7-ம் தேதி நடைபெறும் பா.ஜ.,எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒரு மவதாக தேர்வு செய்ய்பபட்ட பின்னர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என கூறப்படுகிறது.
தே.ஜ., கூட்டணி கூட்டம் முடிந்த பின்னர் மத்திய மந்திரி பியூஷ்கோயல் இல்லத்தில் அவரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் பங்குபெறும் போது முக்கிய துறைகள் கேட்டு பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
“உலகில் இந்தியாவின் பெருமையை அதிகரிப்பதில் மோடியின் பங்களிப்பு அதிகம். மோடியின் தலைமைத்துவம், அவரது தலைமையில் தேசம் வளர்ச்சி அமைந்துள்ளது . வறுமை ஒழிப்புக்காக மோடி மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.”
என்று கூட்டணி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.