தமிழகத்தில் வாக்கு அதிகரிப்பு, பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு
1 min read
Vote increase in Tamil Nadu, bright future ahead: PM Modi speech
7.5.2024
பழைய பாராளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்து வரும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் பேசிய பிரதமர் மோடி தனது பேச்சில் தமிழகத்தைப் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
கேரளாவில் பெரிய மேஜிக் நிகழ்ந்து பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திராவின் புயலாக திகழ்கிறார்.
வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி வதந்தி பரப்பிய எதிர்க்கட்சிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சந்தேகம் எழுப்பியவர்கள் தற்போது மவுனமாகி விட்டனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் 100 ஆண்டு பழைய சிந்தனையுடன் செயல்பட்டது. ஜனநாயகத்தின் தாய் இந்தியா என பா.ஜ.க. சொல்கிறது. ஆனால் ஜனநாயகம் செத்துவிட்டது என காங்கிரஸ் விமர்சிக்கிறது.
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சியில் இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி சாதாரணமானது அல்ல, இமாலய வெற்றி.
இவ்வாற அவர் கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:-
இதையடுத்து நரேந்திர மோடி பேசியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்த எம்.பி.க்களுக்கு நன்றி.
பாராளுமன்ற என்.டி.ஏ. குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாரதிய ஜனதா தொண்டர்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.
புதிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவில் 22 மாநிலங்களில் என்.டி.ஏ. கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.
என்.டி.ஏ. ஆதரவு மூலம் இந்தியாவை ஆட்சி செய்ய புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் NDA போல் வேறு எந்த கூட்டணியும் வென்றதில்லை.
ஆட்சி அமைக்க உரிமைகோரும் அளவிற்கு என்.டி.ஏ. கூட்டணியில் எம்பிக்கள் உள்ளனர்.
நாட்டை வழிநடத்த ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது.
என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள கட்சிகள் இயற்கையாக ஒன்றிணைந்து செயல்படக்கூடியவை.
என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளுக்கு தேச நலன் தான் பிரதானமானது.
தேச நலனில் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது.
அதிகார ஆசையில் உள்ள ஒரு சிறு குழு தான் இந்தியா கூட்டணி.
ஆட்சி அதிகாரத்திற்காக ஒன்று சேர்ந்த இந்தியா கூட்டணி தற்போது உடையத் தொடங்கி உள்ளது.
கடந்த காலங்களில் நல்லாட்சி கொடுத்து புகழ்பெற்றது என்.டி.ஏ. கூட்டணி.
கடந்த 10 வருடங்களில் என்.டி.ஏ. நல்லாட்சி தந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
அனைத்து மதங்களும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு மோடி பேசினார்.