தென்காசியில் வருமான வரி செலுத்து. வோருக்கான விழிப்புணர்வு கூட்டம்
1 min read
Pay income tax in Tenkasi. Awareness meeting for thieves
8.5.2024
தென்காசி மாவட்டம், குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருமான வரிசெலுத்துவோர் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு வருமான வரி ஆணையாளர் சஞ்சய் ராய் தலைமை தாங்கினார்.மதுரை முதன்மை வருமான வரி ஆணையாளர் வசந்தன், மற்றும் மனோஜ் பிரகாஷ், இணை வருமானவரி ஆணையர்கள் முன்னிலை வகித்து வருமான வரி செலுத்துவதற்கான பல்வேறு பயனுள்ள தகவல்களை எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வருமானவரித்துறை மதுரை மண்டல தலைமை ஆணையர் சஞ்சய் ராய் நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு மட்டும் 11 கோடிக்கு அதிகமான இந்தியர்கள் டூரிஸ்ட் விசாவில் வெளிநாடு சென்று உள்ளதாக தெரி வித்த அவர் அதே ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தவர்களிம் எண்ணிக்கை 8 கோடிக்கும் குறைவாக கு இருப்பதாக கூறினார்.
நாட்டின் நிர்வாகத்தின் முதுகெலும்பாக வருமான வரிஇருந்துவருவதாகவும், இதனை முறையாக தாக்கல் செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றும் வலியுறுத்தினார்.
மேலும் மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள் குறித்தும் டிஜிட்டல் யுகத்தில் வரி செலுத்து வோரின் பங்கு வரி ஆணையாளர்கள் மற்றும் கடமைகள் பற்றியும்
குறைகளுக்கான தீர்வுகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் வருமான வரி குறித்த பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்வில் தென்காசி வரி ஆலோசகர்கள் சங்க நிர்வாகிகள், மற்றும் வர்த்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.