June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி வட்டார அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான ஆய்வுக் கூட்டம்

1 min read

Study meeting for all Headmasters of Tenkasi District

8.5.2024
தென்காசி வட்டார அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மேலகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து நடைப்பெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர்கள் சண்முகசுந்தர பாண்டியன் இளமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் 10.06 2024 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும், காலை உணவுக்கான ஆயத்த பணிகளை செய்யவும், 2024 – 25 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தீவிர படுத்த வலியுறுத்தியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறை கடிதத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.