சங்கரன்கோவில் அருகே மின் கம்பத்தில் ஏறியவர் பலி
1 min read
A person who climbed an electric pole near Sankarankoil was killed
13.5.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மின் கம்பத்தில் ஏறி பீஸ் போட முயன்ற கோழிக்கறி கடைக்காரர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 44) இவர் அப்பகுதியில் கோழி கறிக்கடை நடத்தி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்
இந்நிலையில்
அப்பகுதியில் மின் கம்பங்களில் பழுது ஏற்ப்பட்டால் மின்வாரிய ஊழியர்களுக்கு பதிலாக வெள்ளத்துரை மின் கம்பத்தில் ஏறி பழுதுகளை நீக்கும் பணியை அனுமதியின்றி செய்து வந்ததாக கூறப்படுகிறது இதற்கு மின்வாரிய ஊழியர்களும் உடந்தையாக இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
இந்நிலையில் நேற்று மாலை மேல நீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சட்டநாதன் என்பவரது தோட்டத்தில் மின் இணைப்பில் ஏற்ப்பட்ட பழுதை நீக்கி மின்சாரம் கொடுப்பதற்காக அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறியதாக கூறப்படுகிறது அப்போது எதிர்பாராத விதமாக வெள்ளத்துரை மீது மின்சாரம் பாய்ந்தது இதில் வெள்ளத்துரை மின் கம்பத்தின் மேலேயே துடிதுடித்து உயிரிழந்தார் மேலும் மின் கம்பத்தில் வெகு நேரமாக அவரது உடல் தலை கீழாத தொங்கிக் கொண்டிருந்தது
அப்பகுதியில் விவசாய வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பணவடலி சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு வந்த வெள்ளத்துரையின் மனைவி மற்றும் மகன்கள் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வெள்ளத்துரை யின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் மின் வாரியத்தில் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் முறையான பயிற்சி இல்லாத மின் பணிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாத நபர்கள் மின் கம்பங்களில் ஏறி மின் இணைப்பு கொடுப்பது மற்றும் பியூஸ் போடுவது என்பது தொடர் கதையாகவே உள்ளது
கிராமங்கள் மற்றும் கிராம வயல்வெளிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் வருவதற்கு முன்பாகவே அப்பகுதியில் உள்ள நபர்கள் ஆபத்தை உணராமல் மின் இணைப்பை சரி செய்வதும்
மின்சார வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதும் என்பது தொடர்கதையாகவே நடந்து வருகிறது இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் போது தங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிப்பதற்காக ஒன்றுமே தெரியாதது போல் செயல்படுவது என்பது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது
எனவே தமிழக அரசு மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவும் இதுபோன்ற அப்பாவி இளைஞர்களை மரணத்தை தவிர்க்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.