June 15, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது

1 min read

The season started in court

13.5.2024
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் சீராக விழுகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று காலையில் தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பொழிவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குளுகுளு சீசன் நிலவி வருகிறது இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழைய குற்றால அருவிக்கு செல்லும் வாக னங்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளதாக பழைய குற்றாலம் பகுதியில் ஆட்டோக்களை இயக்கி வரும் ஓட்டுனர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கி உள்ளனர்.

அதில் தங்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டுமானால் பழைய குற்றால அருவிக்கரை வரையில் ஆட்டோக்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் ஏனெனில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட தூரத்தில் இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து நடந்து செல்லும் பொழுது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் அதனை தடுக்கும் வகை யில் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.