June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர் பகுதியில் வீடுபுகுந்து தங்கநகைகள் கொள்ளை-ராணுவவீரர் கைது

1 min read

House-breaking gold jewelery robbery in Virudhunagar area-Armyman arrested

13.5.2024
விருதுநகர் பகுதியில் வீடுபுகுந்து கொள்ளையடித்த சம்பவத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் போலீசார் இராணுவவீரரை கைது செய்து விசாரணை தீவிர நடத்தி வருகிறார்கள்.

இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வரும் இராணுவ வீரர் ஒருவர் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த போது பல்வேறு வீடுகளில் புகுந்து தங்க நகைகளை கொள்ளை அடித்து அந்த நகைகளை சங்கரன்கோவிலில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்துளள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இராணுவ வீரர் குழந்தைவேலு
(வயது 40) இவர் டெல்லியில் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்கு சொந்த கிராமத்திற்கு வந்தவர் பல்வேறு வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெரியவந்ததை தொடர்ந்து வெம்பங்கோட்டை காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டதோடு
கொள்ளையடித்த நகைகளை சங்கரன்கோவிலில் உள்ள நகைகடையில் விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வெம்பங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ வீரருடன் நகைகடையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.