June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

1 min read

Special Camp for Diagnosing Iris Disease at Bethanadarpatti

17.5.2024
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார் பட்டியில் நடைபெற்ற கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாமில் 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டியில், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் கண் தான விழிப்புணர்வு குழு இணைந்து நடத்திய கருவிழி நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு பெத்தநாடார்பட்டி தொழிலதிபர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் தேர்வு அருள் ஆனந்தன் வரவேற்று பேசினார் .
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் தேர்வு தங்கராஜ் தொகுப்புரை ஆற்றினார்.
324 ஏ மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி, அவருடைய துணைவியாரும், மாவட்ட முதல் பெண்மணியுமான பிரமிளா ரவி ஆகியோர் இணைந்து முகாமினை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 324 ஏ மாவட்ட அமைச்சரவை செயலாளர் சுப்பையா, வட்டாரத் தலைவர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரவிந்த் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து அலுவலர் கடல் மணி ஆகியோர் செய்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.