பஞ்சாயத்து தலைவர்கள் பதவி 5 ஆண்டுகள் நீடிக்க சட்ட நடவடிக்கை – சுப்பிரமணிய சுவாமியிடம் கோரிக்கை
1 min read
Legal action to extend tenure of Panchayat presidents for 5 years – Request to Subramania Swamy
21.6.2024
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் 2982 ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் ஐந்தாண்டு காலம் நீடிக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியிடம் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும் கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே. பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முன்னாள் மத்திய அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 2982 ஊராட்சி மன்ற தலைவருடைய பதவி காலத்தை தமிழக அரசு 5 ஆண்டுகளை மூன்று ஆண்டுகளாக குறைத்ததை மீண்டும் 5 ஆண்டுகளாக நாங்கள் பதவியில் வகிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியை சந்தித்து தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி கே பாண்டியன் மற்றும் தென்காசியின் கூட்டமைப்பின் செயலாளர் கீழக்கடையம் பூமிநாத் பொருளாளர் இரவணசமுத்திரம் முகமது உசேன் ஆகியோர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியை அவரது இல்லத்துக்கு சென்று நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 2982 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்காலம் 21.10.2026 வரை உள்ள நிலையில் இப்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தப் போவதாக தமிழக அரசு முடிவு செய்வது மிகுந்த வேதனைக்குரியது. எனவே சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2982 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடிக்க உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
தென்காசி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியிடம் கோரிக்கை மனு கொடுத்த நிர்வாகிகள் 2982 ஊராட்சி மன்ற தலைவர்களின் வேதனையை தீர்த்து வைப்பது உங்களுடைய கடமை என்று எடுத்து கூறினார்கள். அதற்கு டாக்டர் சுப்பிரமணிய சுவாமி நிச்சயமாக உங்களுடைய பதவி காலம் 21.10.2026 வரை நீடிக்க கண்டிப்பாக நீதிமன்றத்தில் வாதாடி உங்களுக்கு உரிய அனுமதி பெற்று தருவேன் என்று உறுதி அளித்தார். அவருக்கு தமிழக ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி தெரிவித்தனர்.