தென்காசியில் சுகாதாரத்துறை ஆய்வு ஒருங்கிணைப்புகுழு கூட்டம்-கலெக்டர் பங்கேற்பு
1 min read
Tenkasi Health Sector Survey Coordinating Committee Meeting-Collector Participation
24.5.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சுகாதாரத்துறை ஆய்வு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் புகையிலை தடுப்பு சம்பந்தமான நடவடிக்கைகள், முக்கியமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பது மற்றும் உபயோகிப்பது குறித்து தெரிய வந்தால் உடனடியாக அபராத தொகை விதிக்க சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் உணவு
பாதுகாப்புத் துறை இணைந்து பணியாற்ற வேண்டும்.
பருவ கால நோய்கள் குறிப்பாக காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு சுகாதாரத் துறையோடு உள்ளாட்சித் துறையும் இணைந்து சுற்றுப்புற சுகாதாரம், சீரான குடிநீர், குளோரின் கலந்து நீர் விநியோகத்தலை முறையாக வழங்க வேண்டும்.
இளவயது திருமணங்களை தடுப்பதற்கு பொதுமக்கள் 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், அயோடின் கலந்த உப்பினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தினார்.இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறையின் திட்டம் சார்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார், சுகாதாரத் துறை அலுவலர் மரு.கோவிந்தன், மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.பிரேமலதா, ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ. சமூக நலத்துறை அலுவலர் மதிவதனா. துணை இயக்குநர் (தொழுநோய்) அலர்சாந்தி, செய்திமக்கள் தொடர்பு அலுவலர்.இரா.இளவரசி மற்றும் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரிக் கல்வித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை இணை இயக்குனர் நலப் பணிகள் துணை இயக்குனர்கள், தொழுநோய் மற்றும் காசநோய் வட்டார மருத்துவ அலுவலர்கள், பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.