பழைய குற்றாலத்தை வனத்துறை யிடம் ஒப்படைக்ககூடாது- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
1 min read
Old land should not be handed over to forest department – farmers demand in grievance redressal meeting
29.5.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பழைய குற்றாலத்தை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் 2024 2025 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 4863 ஹெக்டேர், சிறுதானியங்கள் 4751 ஹெக்டேர், பயறு வகைகள் 514 ஹெக்டேர் பருத்தி 734, கரும்பு 35 ஹெக்டேர், எண்ணெய் வித்து 992 ஹெக்டேர், மலைப் பயிர்கள்- 1 ஹெக்டேர், பழங்கள் 25 ஹெக்டேர், காய்கறிகள் 442 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் 4 ஹெக்டேர், மருத்துவப் பயிர்கள் ஹெக்டேர், பூக்கள் 6 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அச்சன்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் சார்பாக அச்சன்புதூரில் ரூ.50,00,000/- நிதி ஒதுக்கீட்டில் அமையவிருக்கும் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளமைக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தென்காசி வட்டார வேளாண்மைத்துறையினர் மற்றும் வாசுதேவநல்லூர்- சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் துவக்கி வைத்து பார்வையிட திரளான விவசாயிகளும் கண்டு பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 326 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே. கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்றும், பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என்ற கோரிக்கை மனுவினை மேலகரம் டேனிஅருள்சிங் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வடகரை ஜாகிர் உசேன் அடவி நயினார் அணைக்கட்டின் கீழ் உள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வதை தடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகளை அடர்வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் .அடவினார் கோவில் நீர்த்தேக்கத்தில் பழுதடைந்த மதங்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினௌ மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) .மு. அமிர்தலிங்கம், மாவட்ட வன அலுவலர் முனைவர் இரா.முருகன் இ.வய வேளாண்மை இணை இயக்குநா(பொறுப்பு) ச.கனகம்மாள், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் .சு.ஜெயபாரதி மாலதி, வேளாண்மை துணை இயக்குநர்(மத்திய மற்றும் மாநிலத் திட்டம்)(பொ).மு. உதயக்குமார், உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், முதுநிலை மண்டல மேலாளர், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இரா.ராஜேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கு. நரசிம்மன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்