போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன்
1 min read
Jaber Sadiq granted bail in drug smuggling case
12.7.2024
ரூ, 2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக சென்னையை சேர்ந்த முன்னாள் தி மு க நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டு ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி சுதீர் குமார் சிரோஹி விசாரித்தார். இதில் ஜாபர் சாதிக் சார்பில் வக்கீல் ஹரிஹரன் ஆஜராகி முன்வைத்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.