June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி- தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

1 min read

Nipah virus outbreak echoes in Kerala- Intensive surveillance at Tamil Nadu border

24.7.2024
கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக கேரளாவிலிருந்து தமிழக வரும் வாகனங்களில் தீவிர கண்காணிப்பு சோதனை நடந்து வருகிறது.

நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் ஆணைக்கிணங்க செங்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கதிரவன் தலைமையில் நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சுகாதார குழுவின் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கண்காணிப்பு குழு மூன்று ஷிப்டுகளாக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்தற்குள் வரும் அனைவருக்கும் காய்ச்சலுடன் கூடிய அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா? என்பதை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து காய்ச்சல் உள்ளவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

அதன்படி புளியரையில் நடைபெற்று வரும் கண்காணிப்பு பணியினை தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட தொற்றுநோய் அலுவலர் மருத்துவர் தண்டபாணி, மாவட்ட மலேரியா அலுவலர் ராமலிங்கம், மாவட்ட நலக்கல்வியாளர் ஆறுமுகம் , ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன், மேற்பார்வையில் முகாம் ஏற்பாடு செய்து சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், ரிஸ்வான், கல்யாணி சுந்தரம் ,ஆகியோர் 24 மணி நேரமும் மூன்று ஷிப்டுகளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.