June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையத்தைச் சேர்ந்த பிடிஓ மாரடைப்பால் மரணம்

1 min read

PTO from Kadayam dies due to heart attack

24/7/2024
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், கடையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் திலகராஜ் (வயது 52). இவர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த திலகராஜ் மாலை 6 மணிக்கு தனக்கு நெஞ்சு வலிப்பதாக தனது ஜீப் டிரைவரிடம் கூறியுள்ளார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் பெரும் சோகத்தில் மூழ்கியது.

நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பணியின் போது இறந்துவிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜிக்கு மனைவி மற்றும் இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இன்று கடையம் பாரதி நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.