திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 2 பேர் கைது
1 min read
Foreign currency seizure at Trichy airport: 2 arrested
25.7.2024
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமான பய ணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பெண் பயணியின் உடமையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பார்சல் ஒன்று இருந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சுங்கத்து றை அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது அதில் 8000 அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 5.63 லட்சம் என தெரிய வருகிறது.
அதற்கான உரிய ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இல்லை என்பதால் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதே போன்று சிங்கப்பூ ருக்கு சென்ற ஸ்கூட் விமான பயணிகளின் உடமை களை சோதனை செய்தபோது பயணி ஒருவர் சிங்கப்பூருக்கு கடத்த இருந்த ரூபாய் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்க எண் மற்றும் யூரோ பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்து றை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் அதிக அளவில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.