கீழப்பாவூர் பெரிய கோவில் கொடை விழா
1 min read
Geezpavur big temple donation ceremony
31.7.2024
தென்காசி அருகே உள்ள கீழப்பாவூர் பெரியகோவில் கொடைவிழா நடைபெற்றது.
முதல் நாள் குடிஅழைப்பு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூஜைகள் நடந்தன பின்னர் இரவு சாஸ்தா பிறப்பு, மற்றும் 21 தெய்வங்களின் கதை வரலாறு என வில்லிசை நடை பெற்றது , இரண்டாம் நாள் பக்தர்கள் கோவிலில் பொங்கலிட்டு வழிபடுதல் வைபவம் நடைபெறுகிறது
அதனைத் தொடர்ந்து பச்சதண்ணீரில் விளக்கு ஏற்றும் வைபவம் நடை பெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். இரவு சாமியாடுதல் , வில்லிசையும் அதனைத் தொடர்ந்து இரவு பூஜை நடைபெற்றது.
மூன்றாம் நாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நான்காம் நாள் சிறப்பு பூஜைகள் வில்லிசை கலைஞர் விநாயகம் குழுவினரின் பெரியசுவாமி, துள்ளுக்குட்டி மாடசுவாமி சிவனணைந்த பெருமாள் மற்றும் முப்புலி மாடசுவாமி வரலாறு சுடலை மாடசுவாமி,வண்ணக் கருப்பசுவாமி கதைகளை வில்லிசைக்குழுவினர் வில்லிசை வழியாக மக்களுக்கு எடுத்துரைத்தனர்
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொடை விழாவில் கீழப்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் வணிக வைசிய வாணிய சமுதாயத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.