கடையநல்லூரில் வேளாண் கருத்தரங்கம் – கண் காட்சி
1 min read
Agricultural Seminar – Exhibition at Kadayanallur
1.8.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஊர்மேல்யழகியான் கிராமத்தில் உள்ள ஆர்வி.எஸ். வோளண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பாரம் பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைப்பெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சதன்திருமலைக் குமார் , கடைய நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்பம்மாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், க.பூங்கொடி, ஒன்றிய கவுசிலர் மாரியம்மாள் ஆகியோர், முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர்
சே.கௌசல்யா அனைவரையும் பேசினார்.
தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்எஸ்.கனகம்மாள்
தொழில் நுட்ப உரை மற்றும் திட்ட விளக்கவுரை யாற்றினர். இந்த விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே கமல் கிஷோர் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் தொடர்பான கண்காட்சியினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியை வேளாண்மை அலுவலர் மு. ஷேக் முகைதீன் தொகுத்து வழங்கினார்
தென்காசி மாவட்ட அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் விண்ணரசு , ஊர்மேலழகியான் ஆர்வி எஸ் வேளாண்மைஆராய்ச்சி நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் (பொ) முனைவர் ஜே.சுகுமார் திருநெல்வேலி வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை, துணை இயக்குநர், பூவண்ணன், தென்காசி வேளாண் பொறியியல் துறை, உதவி செயற் பொறியாளர்
மா.சங்கர், தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர், (பொ) எம்.உதயகுமார்
இயற்கை வேளாண்மையில் தமது அனுபவங்கள் பற்றி பேசினார்கள்.
நேஷனல் பப்ளிக் பள்ளி 18 மாணவர்கள் கலந்து கொண்டு பேண்ட் வாத்தியம் முழங்க மற்றும் அதனையெடுத்து கவிஞர் தளவாய் இளம் குமரன் அவருடன்
கவிதை பாடி அசத்தினார்கள் பின்பு சிறந்த விவசாயிகள்
மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் முன்னோடி இயற்கை வேளாண்மை ஆர்வலர், அம்பை
சங்கர சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் பர்வீன், சித்திகாயர்வீன், இயற்கை விவசாயி, பந்தபுளி பெ.சீனிவாசன்,
இயற்கை வேளாண்மை ஆர்வலர் ஸ்ரீ ராம், மற்றும பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு பகுதிகளிலுருந்து ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர், இளஞ்செழியன் தலைமையில் ஒருங்கிணைந்து செய்தனர்.
முடிவில் வேளாண்மை திட்ட ஆலோசகர் இரா.வெங்கட சுப்பிர மணியன் நன்றியுரை வழங்கினார்.