செங்கோட்டை அருகே விபத்தில் 2 பேர் பலி-3 பேர் படுகாயம்
1 min read
2 killed, 3 seriously injured in an accident near Red Fort
3.8.2024
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே கார் மீது லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். சுற்றுலா சென்ற 3 நண்பர்கள் படுகாயமடைந்தனர்.
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது 37), பெரிய செல்வம் (வயது 38), மணி (வயது 41), சுந்தரபாண்டி (வயது 42), செந்தில் குமார் (வயது 40) , நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று காலையில் இருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு கேரளாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். மாலை 5.30 மணியளவில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை கடந்து கேரள எல்லையான ஆரியங்காவு பகுதியை அடுத்த எடப்பாளையம் ரெயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரை சாலையின் வலதுபுறமாக திருப்ப முயன்றதாக கூறப்படுகிறது, அந்த நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக காரின் மீது பயங்கரமாக மோதியது. மேலும் காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு மினி லாரியும் காரின் மீது மோதியநு
அடுத்தடுத்து லாரிகள் மோதிய தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடு களில் சிக்கி பலத்த காயம் அடைந்த ரமேஷ். பெரிய செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மணி, சுந்தரபாண்டி, செந்தில்குமார் ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தென்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த ரமேஷ், பெரியசெல்வம் ஆகியோரின் உடல்களைக் கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவுக்கு சுற்றுலா சென்றவர்களின் கார் மீது லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.