June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக ராஜபாளையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பொறுப்பேற்பு

1 min read

A scientist from Rajapalayam has taken charge as the director of the Central Sugarcane Research Institute

3.8.2024
மத்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த முனைவர் பெ.கோவிந்தராஜ் முதல் இயக்குநராக பொறுப்பேற்றார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முனைவர்.பெ.கோவிந்தராஜ் தமிழ்நாட்டை தலைமை இடமாக கொண்டு கோயம்புத்தூரில் செயல்படும் 112 ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க மத்திய அரசின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவருக்கு நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளும், தொழிட்நுட்ப வல்லுநர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் முத்தரசு, இளங்கோ, ராஜா, தனபால், கண்ணையன், முரளி கிருஷ்ணன்,பிரதீப் குமார், சுமன் அலுவலக பணியாளர்கள் முருகேசன்,மல்லிகா, லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு
மத்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பெ.கோவிந்தராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.