June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சபரிமலையில் 12-ந் தேதி நிறைபுத்தரி பூஜை -அச்சன்கோவிலில் இருந்து நெல்கதிர் ஊர்வலம்

1 min read

Niraiputri Puja at Sabarimala on 12th – Nelkadir Procession from Achankovil

9.8.2024
சபரிமலை நிறைபுத்தரி பூஜை வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்கு நடைபெறுகிறது..

அதற்காக பிரத்தேகமாக சபரிமலையில் 11-ந் தேதி (நாளை மறுநாள்) மாலை 5 மணிக்கு நடை திறக்கபடுகிறது..
நிறைபுத்தரி பூஜைக்கான நெல்கதிர்கள் 11-ந் தேதி காலை 5.30 மணிக்கு அச்சன்கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லபடுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருஆபரணம் கமிட்டி தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் உபதேச கமிட்டி தலைவர் பிஜூலால் அச்சன்கோவில் தேவசம் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை ஆகியோர் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் அனைத்து முக்கிய திருகோவில்களிலும் மலையாள புத்தாண்டான சிங்கம் ( ஆவணி ) மாத பிறப்பிற்கு முன் கற்கடக
(ஆடி) மாதத்தில் புதிய நெல்கதிர்கள் வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெல்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.. சுவாமிக்கு படைக்கபட்டு பூஜை செய்யபட்டு பிரசாதமாக வழங்கபடும் நெல்கதிர்களை வாங்கி நம் வீடுகளில் வைக்க ஜஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம்.. இதனால் நெல்கதிர்கள் பிரசாதம் வாங்க கேரள முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டு நிறைபுத்தரி பூஜை க்கு தேவையான நெல்கதிர்கள் தமிழகத்தில் இருந்து திருஆபரணபெட்டி வாகனத்தில் நேற்றுமுன்தினம் அச்சன்கோவிலில் கொண்டு சென்று திருஆபரண கமிட்டி தலைவர் தென்காசி ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவிலில் உபதேச கமிட்டியின் துணை தலைவர் உண்ணி பிள்ளை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேற்கண்ட தகவலை சபரிமலை நிறைபுத்தரி கோசயாத்திரை பொறுப்பாளர் தென்காசி ஏசிஎஸ்.ஹரிஹரன் குருசாமி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.