குற்றாலத்தில் பொது சுகாதார துறை அலுவலர் சங்க மாநில மாநாடு
1 min read
State Conference of Public Health Department Officers Association at Courtal
10.8.2024
பொது சுகாதார துறை சங்க மாநில மாநாடு குற்றாலத்தில் 10 மற்றும் 11 தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற உள்ளது மாநாட்டில் நிறைவேற்ற உள்ள 11 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன் பேட்டி
தென்காசி மாவட்டம் குற்றாலம்
காசிமேஜர்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றும் நாளையும் பொது சுகாதார துறை அலுவலர் சங்க மாநில மாநாடு நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமாக பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தபோது ; பத்து மற்றும் பதினொன்றாம் தேதி சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது,இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து தொழில்நுட்ப நேர்முக உதவியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் என சுமார் 2000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மாநாட்டினை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் செந்தில் துவக்க உரையாற்றுகிறார் துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட தோழமை நிர்வாகிகள் சிறப்புரையாற்ற உள்ளனர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்ற உள்ளார் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர், தமிழகத்தில் களப்பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர் நிலை 2 ன் காலி பணியிடங்கள் 1500 க்கும் அதிகமாக உள்ளது, எனவே அரசு போர்க்கால அடிப்படையில் இந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சுகாதார ஆய்வாளர் எண்ணிக்கை கடந்த காலங்களில் 1990 களில் 11000 என்று இருந்தது தற்போது 3500 பணியிடங்களுக்கு கீழாக தான் உள்ளது இவ்வளவு எண்ணிக்கை குறைக்க காரணமாக இருந்த அரசு ஆணையின் 338 மற்றும் 337 ஐ நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும், முதல்வரின் கனவு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ரூ 14000 மட்டும் வழங்கப்படுகிறது தினந்தோறும் எரிபொருள் செலவு அவர்களுக்கு ரூ 200 செலவு ஆகிறது எனவே அவர்களுக்கு ரூ 20000 குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும் சங்கத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்களாக இருக்க கூடிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில் இருந்து பொது சுகாதார துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் 7-11-2008 ல் இருந்து முன்தேதியிட்ட பதவி உயர்வு என்பது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 7 – 5 – 2013 ல் இருந்து ஏறக்குறைய 11 ஆண்டுகள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது அதனை நிறைவேற்ற வேண்டும், என்று கோரிக்கை வைக்கிறோம், ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூட 7 – 11 – 2008 முதல் முன் தேதியிட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது, சுகாதார ஆய்வாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் 5% தனி ஊதியத்தினை பாதுகாப்பதில் அரசு எந்த தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்காத காரணத்தால் பணி ஒய்வு பெறும் போது ஒவ்வொருவரும் மிகை ஊதியம் பெற்றதாக ரூ 5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையினை பிடித்தம் செய்ய உத்தரவிடும் சூழல் உள்ளது, அது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், மாநாட்டில் நிறைவேற்ற உள்ள 11 அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், நிறைவேற்ற தவறினால் 17-9-24 முதல் சென்னை டி எம் எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார் பேட்டியின் போது மாநிலத் தலைவர் கங்காதரன், மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், கணேசன், மாநில பொருளாளர் பாலமுருகன், செயலாளர் கதிரவன், மாநில தணிக்கையாளர் அய்யனார், தென்காசி மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் புன்னைவனம் ஆகியோர் உடனிருந்தனர்.