அவதூறு வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின்- கோவை கோர்ட் உத்தரவு
1 min read
Coimbatore Court orders bail for Chavuka Shankar in defamation case
16.8.2024
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மே மாதம் 3-ந் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக சவுக்கு சங்கரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கக்கோரி சவுக்கு சங்கர் தரப்பில் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு (பொறுப்பு) சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும் அவர் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சவுக்கு சங்கர் தரப்பில் டெல்லியை சேர்ந்த வக்கீல் மவுலி வெள்ளிமலை ஆஜரானார்.