July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

இ.ஓ.எஸ்.08 செயற்கைக்கோள்- புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது

1 min read

EOS 08 satellite- placed in Earth orbit

16.8.2024
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.

3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் திட்டமிட்ட திசையில் சரியாக பயணித்தது.

பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் 24 மணி நேரமும் பூமியை கண்காணிக்கும்.

சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.