ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் தகுதி நீக்கம்
1 min read
Audhaiyanur panchayat council president disqualified near Tenkasi
17.8.2024
தென்காசி அருகே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆவூடையானூர் ஊராட்சி மன்ற தலைவரை மதுரை உயர்நீதிமன்ற உத்தரவு படி தென்காசி மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக பதவி வகித்தவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி. இவர் பல்வேறு முறைகேடுகளிடம் ஈடுபட்டதாக கூறி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் 10க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து பல்வேறு புகார்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ஊராட்சியில் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்யப்பட்டதில், ஊராட்சி மன்றத்தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனார். அந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின் பேரில், ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் (எ) கோபியை தகுதி நீக்கம் செய்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர்உத்தரவு பிறப்பித்தார். இதற்கான நகல் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு
முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் பகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.