June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நம்பியாற்றில் வெள்ளம்: திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல தடை

1 min read

Floods in Nambiar: Ban on visiting Tirumalainambi temple

21.8.2024
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலை நம்பி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.

மேலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்நிலையில் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்குறுங்குடி வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.

இதுபோல நம்பியாற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.