June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி நகராட்சி சார்பில் வயநாடுக்கு ரூ.1.15 லட்சம் நிவாரண நிதி

1 min read

1.15 lakh relief fund for Wayanad on behalf of Tenkasi Municipality

22.8.2024
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர் , மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நிவாரண நிதியாக ரூ.1.15 லட்சத்திற்கான காசோலையை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோரிடம் நகராட்சி சேர்மன் ஆர்.சாதிர் வழங்கினார்.

கேரள மாநிலம் வயநாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அங்கு நிவாரண பணிகள் நடை பெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினர் நிவா ரண பொருட்கள் மற்றும் நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி நகராட்சி சார்பில் நகராட்சி தலைவர் ஆர்.சாதிர், தனது 2 மாத சம்பளம் ரூ.30 ஆயிரம், 31 கவுன்சிலர்கள் இணைந்து ரூ.85 ஆயிரம் என மொத்தம் ரூ.1.15 லட் சம் நிதி திரட்டப்பட்டது.

நேற்று நகராட்சிக்கு ஆய்வுக்காக வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோரிடம் வயநாடு நிவாரண நிதிக்காக ரூ.1.15 லட்சத்திற்கான காசோலையை நகர் மன்றத் தலைவர் ஆர்.சாதிர் வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம், தென்காசி நகர பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதனை சரி செய்யும் வகையில் தென்காசியில் உள்ள உலகம்மன் குளம், சீவ லப்பேரி குளம், பச்சைநா யக்கன் குளம் உள்ளிட்ட 9 குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 15,500 குடிநீர் இணைப்பு வழங்கப்பட் டுள்ளது. ஆனால் 9 ஆயிரம் இணைப்புகளுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே தற்போதைய சூழலில் சேமித்து வைக்க முடியும்.

எனவே தென்காசி பகுதியில் குடிநீர் தட் டுப்பாட்டை போக்கும் வகையில், உடனடியாக ஒரு மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைத்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்பிரியா, கவுன்சிலர்கள் வசந்தி வெங்கடேஸ்வ ரன், உமா மகேஸ்வரன், கல்பனா கங்காதரன், ராமசுமதி, கார்த்திகா சுமதி இசக்கிரவி, முப்பு டாதி ரஞ்சித், பொன்னம் மாள் கருப்பசாமி, நாகூர் மீரான், முகமது மைதீன் என்ற ராசப்பா, சுல்தான் ஷெரீப்காமில், பூமாதேவி முருகன், ரெஜினா, சீதா லட்சுமி, சங்கர சுப்பிரம ணியன், ஜெயலட்சுமி, ஆசிக்முபினர் சன்ராஜா. பானுஷமீம், சையது சுலை மான் என்ற ரபிக், அபுபக்கர், ராமசுப்பிரமணியன், சுனிதா, மகேஸ்வரி, மஞ்சுளா, முத்துகிருஷ்ணன், ஆனந்தபவன் காதர்மைதீன், குருசாமி. லெட்சுமணபெருமாள், முருகன், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.