தென்காசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பேருந்து சேவை
1 min read
Bus service from Tenkasi to Rameswaram
22.8.2024
தென்காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய அரசு பஸ் சேவை மற்றும் தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டூ ஒன் அரசு பேருந்தையும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் தென் காசியில் இருந்து திருநெல்வேலி – தூத்துக்குடி – ராமேஸ்வரத்திற்கும், தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டூ ஒன் அரசு பேருந்துகளை நேற்று தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே ஜெயபாலன், ஆகியோர் கொடி
அசைத்து துவக்கி வைத்தனர்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில்
தென்காசி நகர திமுக செயலாளர் நகர் மன்ற தலைவருமான,
ஆர்.சாதிர், தென்காசி மாவட்ட
ஊராட்சி துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன்,
தென்காசி அரசு போக்குவ ரத்துகழக மேலாளர் முருகன்,
தென்காசி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொமுச செயலாளரும் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான வல்லம் எம்.திவான்ஒலி, தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச நிர்வாகிகள் ஜோசப், மகேஷ், சைலப்பன், கண்ணன், நடராஜன், முருகையா, ஆவுடைநாயகம், வெங்கடேசன். சுடலைமுத்து, தென்காசி நகர திமுக பொருளாளர் அ.ஷேக்பரீத், திமுக மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் ராமராஜ், சபீக் அலி, முத்து சுப்பிரமணியன், மாவட்ட தொழி லாளர் அணி துணை அமைப்பாளர் கரிசல் வேல்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அழகு தமிழ்சங்கர், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே தங்கப் பாண்டியன், பவுல், பாப்பா, நகர காங்கிரஸ் தலை வர் மாடசாமி ஜோதிடர், துணைச்செய லாளர் தியாகராஜன், பொருளாளர் ஈஸ்வரன், சித்திக், சந்தோஷ், தென்காசி சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.