தென்காசியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம்-ஆட்சியர் பங்கேற்பு
1 min read
National Deworming Day Camp in Tenkasi-Government Participation
23.8.2024
தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும், தனியார் பள்ளிகளிலும் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் 2208.2024 அன்று அல்பெண்டசோல் மாத்திரை வழங்கபடுகிறது. மேலும் பள்ளிக்கு செல்லாத சிறார்க்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பேறுசார் அல்லாத மகளிருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வைத்து வழங்கப்படுகிறது.
மேலும், நமது மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுள்ள 3,08, 483 சிறார்களுக்கும். 20 முதல் 30 வயது வரை உள்ள 67754 மகளிருக்கும் மொத்தம் 376237 பேர்களுக்கு இன்று நடைபெறும் முகாமில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு 30.08.2024 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 12 மாத்திரை (200 mg). 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயதுவரை உள்ள மகளிருக்கு 1 மாத்திரை (400 mg) வழங்கப்படும். இக்குடற்புழு மாத்திரை உட்கொள்வதினால் குழந்தைகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் இரத்தசோகையை தடுக்கவும். நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன், உடற்வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகாம்களில் தங்கள் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ/மாணவியர், பள்ளி செல்லா மாணவ,
மாணவியர் மற்றும் மகளிரை அழைத்துவந்து குடற்புழு நீக்க மாத்திரை தகுதியுடையவர்கள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இம்முகாமில் அனைவரும் குடற்புழு நீக்க நாள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியின் விவரம் பின்வருமாறு:-
வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம் உருண்டை புழு. கொக்கி புழு, நாடா புழு தொற்றினை ஒழிக்க முடியும் என்று அறிவேன். குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால் உடல் வளர்ச்சி, அறிவு திறன். நோய் தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கும் என்பதையும் நன்கு அறிவேன். நானும் எனது சுற்றத்தினரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் என்றும், சுகாதார கழிவறையை உபயோகிப்போம் என்றும் சாப்பிடும் முன்னும் பின்னும் கைகளை சுத்தமாக கழுவுவோம் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம் என்றும், குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதின் மூலம் குடற்புழு தொற்று இல்லா ரத்தசோகை இல்லா தமிழ்நாடு மற்றும் வளமான அறிவாற்றல் உள்ள எதிர்கால சந்ததியினர் உருவாக ஒத்துழைப்பேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் திருமரு.கோவிந்தன். வட்டார மருத்துவஅலுவலர் மோதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் செல்வி.மதிவதனா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிகண்டன். தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், திருமதி மஞ்சம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை ராணி லதா,
ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ தலைவர் தென்காசி என்.வெங்கடேஸ்வரன் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் சுகாதார செவிலியர்கள், மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.