கீழப்பாவூரில் அரசு செவிலியர் விட்டில் ரூ. 7லட்சம் நகை, பணம் கொள்ளை
1 min read
Near Tenkasi Govt Nurse Vittle Rs. 7 lakh jewels and money stolen
23.8.2024
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் சரகம் கீழப்பாவூரில் அரசு செவிலியர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ7 லட்சம் மதிப் பிலான நகை, பணத்தைகொள்ளை யடித்து சென்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
கீழப்பாவூர் வணிகர் மேலத்தெரு வைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் கோமதிசங்கர் கீழப்பாவூரில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி ஆய்க்குடி அரசு மருத்துவமனை யில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20ம்தேதி செவ்வாய்க்கிழமை கீழப்பாவூர் ஊரணி அருகே உள்ள சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழாவில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு இரவு குடும்பத்துடன் சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்ததோடு அங்கிருந்த பிரோவை உடைத்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். கொடை விழா முடிந்து வீடு திரும் பியபோது நகை, பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்த கோமதி சங்கர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில்
புகார் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ். மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தென்காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் வீட்டை சுற்றிவந்தபோதும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை போன நகை மற் றும் பணத்தின் மதிப்பு ரூ 7 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த eபோலீசார். மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கீழப்பாவூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.