மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒய்வூதிய திட்டம் அறிவிப்பு
1 min read
Notification of new pension scheme for central government employees
24.8.2024
மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் ‛‛ஒருங்கிணைந்த ஒய்வு திட்டத்திற்கு” மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், நட்டா, அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஒய்வூய்திய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியது, ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டம் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஒய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வுக்கு முன்பாக சிறு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். பணியின் போது மத்திய அரசு ஊழியர்கள் இறந்து விட்டால், குடும்ப ஒய்வூதிட்டத்தின் கீழ் 60 சதவீத ஒய்வூதிய பலனை அடைய முடியும் இதன் மூலம் 23 லட்சம் ஒய்வூதியர்கள் பலனடைவர்.
தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்பையும், மத்திய அரசு 14 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது, புதிய ஒய்வூதிட்டத்தின் கீழ் மத்திய அரசு பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் . இத்திட்டம் 2025 ம் ஆண்டு ஏப்.01ம் தேதிமுதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்