மத்தளம்பாறை அருகே பஸ் – பைக் மோதியதில் மதபோதகர் பலி
1 min read
Pastor killed in bus-bike collision near Mattalamparai
26.8.2024
தென்காசி அருகே மத்தளம்பாறை – திரவியநகர் சாலையில் அரசு பஸ் – பைக் மீது மோதிய விபத்தில் மத போதகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரு மாள் அவரது மகன் கருப்பசாமி என்கிற சாமுவேல் (வயது 58). கிறிஸ்தவ மத போதகரான இவர் ஒவ்வொரு ஊராக சென்று ஊழியம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் நாங்குநேரியில் இருந்து தனது பைக்கில் சாமுவேல் தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திரவியநகர் – மத்தளம்பாறை பகுதியில் சென்ற போது தென்காசியில் இருந்து அம்பை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவரது பைக் மீது நேருக்கு நேர் மோதி யது.
இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய சாமுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் இருந்த சாமுவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அரசு பஸ் டிரைவர் சொக் கம்பட்டி வணிக வைசிய தெருவை சேர்ந்த வீரபுத்திரன் மகன் சுரேஷ்குமார் (வயது 43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.