June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர் 8 பேர், படகுடன் சிறை பிடிப்பு

1 min read

8 Rameswaram fishermen jailed for catching fish across the border, along with the boat

27/8/2024
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர் 8 பேரை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.
வடக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் சூறைக்காற்று வீசியதால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தொழிலுக்கு செல்லும் படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீதோஷ்ணம் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து கடந்த 26-ந் தேதி காலை ராமேஸ்வரத்தில் இருந்து 430 விசைப்படகுகள் உரிய அனுமதிச்சீட்டு பெற்று தொழிலுக்கு சென்றன. இப்படகுகள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே ஆக நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தன அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி
ராமேஸ்வரம் மரியசியா என்பவரது விசைப்படகில் மீன் பிடித்த மெக்கான்ஸ், கிங்ஸ்டன், மெக்கான்ஸ், சசி, அடிமை, மாரி, இன்னாசி ராஜா, முனியராஜ் ஆகிய 8 மீனவரை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாம் அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படை உயரதிகாரிகள் விசாரணைக்கு பின் மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

நடப்பாண்டு மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 15 ல் தொழிலுக்குச் சென்ற 72 நாட்களில் தமிழக மீனவர் 163 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக
இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசி கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை நடத்தி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், இன்று சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.