June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

1 min read

Bhavoorchatram railway flyover works MLA. Study

27/8/2024
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணிகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலைப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணி தொடங்கி சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும்பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 900 மீ நீளமும், 20 மீ அகலமும் கொண்ட இம்மேம்பாலத்திற்காக இடது புறம் 22 பில்லர்களும், வலது புறம் 22 பில்லர்களும் சேர்ந்து மொத்தம் 44 பில்லர்களுடன்அமைக்கப்பட்டு வருகிறது.

தண்டவாளத்திற்கு மேலே அமைய இருக்கும் பால பகுதிகளை ரயில்வே துறையும், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை செய்து வருகிறது. இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் நிறைவு பெறும் வகையில், இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், ரயில்வே துறைக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ரெயில்வே துறை சார்பில் தண்டவாளத்திற்கு மேலே பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பணிகள் நிறைவு பெறாததால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் நேற்று ரெயில்வே மேம்பாலம் பணி நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மேம்பால பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்படைந்து உள்ளதால், விரைந்து பணிகளை முடித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசின் அமைச்சர்களை சந்தித்து பணிகளை துரித படுத்திட நடவடிக்கை எடுப்பதாக எம்எல்.ஏ. எஸ்.பழனிநாடார் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் குமார்பாண்டியன்,மகாராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, யூனியன் துணை சேர்மன் முத்துக்குமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன், கீழப்பாவூர் நகர தலைவர் சிங்கக்குட்டி (எ) குமரேசன், , பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் தவசிமுத்து,தங்கராஜ், அமர்நாத், மதியழகன்,சிவன் பாண்டியன், சண்முக செல்வன், சண்முகம், மாதவன், காமராஜ், சங்கர்,ரவி, நேசமணி, சட்ட நாதன், இளைஞர் காங்கிரஸ் சின்ன ராஜா, சமுத்திரப்பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.