June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம்: வனத்துறைக்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டம்

1 min read

Old courtroom: All-party meeting against forest department

27.8.2024
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலாதளமான பழைய குற்றாலம் அருவியை அபகரிக்க முயற்சி செய்துவரும் வனத்துறையின் முடிவை தடுத்து நிறுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை செய்திட அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி அருகே குத்துகல் வலசை பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம.உதயசூரியன் தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர் வேலு மயில்,
தமிழக விவசாய நீர்வள பாதுகாப்பு நல சங்க ஒருங்கிணைப்பாளர் டேனிஅருள்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பைம்பொழில் செல்வம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்முத்தலிப், திராவிட தமிழர்கட்சி மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம் அருவியில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

மேலும் பழைய குற்றாலத்தில் விழும் தண்ணீரை பல நூற்றுக்கணக்கான குளங்களில் தேக்கி பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும் பழைய குற்றாலம் அருவியில் சீசன் காலத்தை நம்பி நூற்றுக்கும் அதிகமான வியாபாரிகள் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் அபகரிக்க பெரும் முயற்சி செய்து வருகிறார்கள் இதனை கண்டித்து ஏற்கனவே பலமுறை அனைத்து அரசியல் கட்சிகள் விவசாய சங்கங்கள் வியாபாரிகள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் வனத்துறையினர் தன்னிச்சையாக பழைய குற்றாலம் பகுதியில் கேட் அமைத்து இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை பூட்டு போட்டு பூட்டி உள்ளார்கள்.

வனத்துறையினர் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வரும் காலங்களில் பழைய குற்றாலம் அருவிபகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விவசாயிகள் யாரையும் நுழைய விடாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். வனத்துறையினரின் இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

பழைய குற்றாலம் அருவியில் ஆண்டாண்டு காலமாக உள்ள நடைமுறைப்படி 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும்.விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பழைய குற்றாலம் அருவி கால்வாய் பகுதிகளுக்கு செல்வதற்கு வனத்துறையினர் எந்த வகையிலும் இடையூறு செய்யக்கூடாது. என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்களை வரும் 28.08.2024 அன்று அனைத்துக் கட்சி நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கொடுப்பது என்றும் தமிழக முதலமைச்சர், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர், தமிழக வனத்துறை அமைச்சர், தமிழக ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழக வருவாய்த்துறை அமைச்சர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் தீர்மான நகலினை அனுப்பி வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
தென்காசி மாவட்ட மதிமுக அவைத் தலைவர்கள் இடைகால் செல்வசக்திவடிவேல், தென்காசி என்.வெங்கடேஸ்வரன் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் மருதச்சாமிபாண்டியன் , பொதுக்குழு உறுப்பினர் காசிமேஜர்புரம் ரெங்கசாமி, சுரண்டை நகர செயலாளர் பொன் மகேஸ்வரன், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன், தென்காசி நகர செயலாளர் கார்த்திக், இலஞ்சி பேரூர் செயலாளர் கா‌முருகன், மேலகரம் பேரூர் செயலாளர் வெங்கடாசலம் ,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் சுப்பையா தென்காசி தாலுகா செயலாளர் கிட்டப்பா , தென்காசி வி.சி.க.ஒன்றிய செயலாளர் கமல் துரைஅரசு வி.சி.க.முகாம் செயலாளர் மோகன் திராவிட தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் அணி மதன் தமிழ் புலிகள் மாவட்ட இளம் புலிகள் செயலாளர் தமிழ்க் குமரன் மாரிக்கண்ணன் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.