சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி
1 min read
3 women were killed when a loaded auto overturned near Surandai
28.8.2024
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே வாடியூர் பகுதியில் இன்று காலையில் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டது. லோடு ஆட்டோவில் விவசாய வேலைக்காக சென்ற மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் சரகம் வாடியூர் கிராமத்திற்கு மேல் புறம் இன்று காலை 06.00மணிக்கு திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைகுளம் கிராமத்திற்கு வயல் வேலைக்காக சுமார் 15 நபர்கள் லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
அந்த ஆட்டோவை கீழச்சுரண்டை, பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் தேவேந்திரன் (வயது 25) என்பவர் ஓட்டியுள்ளார். அந்த ஆட்டடோ திருச்சிற்றம்பலம் சுரண்டை வழியாக வாடியூர் மேல்புறம் சென்ற போது வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்துகவிழ்ந்தது . இதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.
தகவல் அறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய 12 பேர்களையும் ஜெசிபி உதவியுடன் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியான மூன்று பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்
இறந்த நபர்கள் திருச்சிற்றம்பலம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி ஜானகி (வயது52), அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி வள்ளியம்மாள் (வயது60) தங்கமணி என்பவரது மனைவி பிச்சியம்மாள் (வயது 60) என்பது தெரியவந்துள்ளது
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான எஸ்.பழனி நாடார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு அரசு மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.