ஆலங்குளம் அரசு பெண்கள் கல்லூரியில் கூடுதல் பாடப் பிரிவுகள் தொடங்க கோரிக்கை
1 min read
Request to start additional courses in Alankulam Government College for Girls
1.9.2-024
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் வேண்டி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாபன் அமைச்சர் பொன்முடியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த கல்லூரியில் சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகள் மட்டுமே தற்போது உள்ளது . எனவே கூடுதல் பாடப் பிரிவுகளாக பி ஏ தமிழ், பி ஏ இங்கிலீஷ், பிஎஸ்சி பிசிகல் எஜுகேஷன், போன்ற பாடப்பிரிவுகள் இளநிலை பிரிவுகளிலும் அதேபோல முதுநிலை கல்வியில் எம் ஏ இங்கிலீஷ், எம் காம் வணிகவியல், எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ், போன்ற முதுகலைப் பாடப்பிரிவுகளும் வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் வழங்கினார்.
ஆலங்குளம் பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. கிராமப் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரியில் பயின்று வருகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் தவிர பிற பாடப்பிரிவுகளுக்கும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கும் கல்வி பயில நெடுந்தூரம் பயணம் சென்று பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது
மேலும் கிராமப்புற மாணவிகள் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்களாக உள்ளார்கள். எனவே நெடுந்தூரம் சென்று அவர்களால் கூடுதல் கல்வி பயில இயலவில்லை
ஏற்கனவே தமிழக உயர் கல் வித்துறை அமைச்சரிடம் மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்புகளாக கல்லூரிக்கு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கடந்த ஆண்டு வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில் பள்ளி கல்லூரி இயக்குனர் கல்லூரி முதல்வரிடம் உரிய விளக்கம் கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் கல்லூரி முதல்வரும் பள்ளி வளர்ச்சி குழு கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உயர்கல்வித்துறை இயக்குனருக்கு கூடுதல் பாடப்பிரிவுகள் வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை மனு மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார்
இந்த நிகழ்ச்சியின் போது திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செல்வன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந் தலைவர் செல்வக்கொடி ராஜாமணி , eகுருக்கள்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வனராஜ், செல்வகுமார் முத்து மற்றும் முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…