June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

வறட்சி காரணமாக வனவிலங்குகளை கொன்று உணவளிக்கும் ஜாம்பிய அரசு

1 min read

Zambian government kills and feeds wildlife due to drought

2.9.2024
தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுவதால் மக்களுக்கு உணவளிக்க வனவிலங்குகளைக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு 2023 முதல் கடுமையான வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது நாம்பியா.
இதனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் பாதியளவு அதாவது சுமார் 14 லட்சம் மக்கள் நாம்பியாவில் உள்ள நிலையில் வறட்சியால் பசி மற்றும் பட்டினியில் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு காட்டில் உள்ள 723 வனவிலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த நாம்பியா முடிவெடுத்துள்ளது.
இந்த 723 வனவிலங்குகளில் 300 வரிக்குதிரைகள், 100 காட்டெருமைகள், 50 இம்பாலா மான்கள், 100 எலான்ட் வகை மான்கள், 30 நீர்யானைகள் , 83 யானைகள் ஆகியவையும் அடங்கும். இந்த திட்டத்தின்கீழ் ஏற்கவே 150 விலங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்மூலம் 63 டன் இறைச்சி பெறப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்கச் சவானா யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ள நிலையில் கடுமையான வறட்சியால், உணவுக்காக யானைகள் கொல்லப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை குடிமக்களுக்காக நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கு தங்களின் அரசியல் அமைப்பில் இடம் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.