ஆழ்வார்குறிச்சியில் அதிமுக சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா
1 min read
VOC birthday party organized by AIADMK in Alwarkurichi
6/9/2024
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆம்வார்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு வ உ சி யின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி ஜி ராஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே ஆர் பி பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், ஆழ்வார்குறிச்சி பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு வ உ சி யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். முடிவில் ஆழ்வார்குறிச்சி பேரூர் அதிமுக செயலாளர் சங்கர் அனைவருக்கும் நன்றி கூறினார்.