ஆவுடையானூர் ஊராட்சியில் தூய்மை பணிக்கு இலவச டிராக்டர்
1 min read
A free tractor distribution ceremony for cleanliness work in Audaiyanur panchayat
7.9.2024
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக இலவச டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) மகேஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் இராம உதயசூரியன், ஊராட்சி துணைத்தலைவர் செல்வமேரி முன்னிலை வகித்தனர்.
தொழிலதிபர் ஆர்.பி.என்.ராஜன் தனது சொந்த செலவில் டிராக்டர் வாங்கி அதனை ஊராட்சி தூய்மைப்பணிக்கான இலவசமாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தைமணி, ஆவுடையானூர் டாக்டர் தர்மராஜ் பங்கேற்று பேசினர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா, நாகல்குளம் கூட்டுறவு வங்கி முன்னாள் துணைத்தலைவர் சொசைட்டி சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் கனியம்மாள்,ஜெயலட்சுமி, செல்வி, தமிழ்ச்செல்வி, பத்திரகாளி, பொன்மலர், சூரிய ராஜ், தங்கப்பாண்டி , அதிமுக தர்மராஜ், குமரேசன், சேர்மகனி, கம்யூனிஸ்ட் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.