June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

1 min read

Old man sentenced to life in POCSO case in Sankarankovil

7/9/2024
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுப்பிரமணியபுரம் வடக்கு காலனி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் சின்ன முத்தையா(69) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷ் குமார் நேற்று முத்தையாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கவும் தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்துறையின ருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஶ்ரீனிவாசன் வாழ்த்துக் களை தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.