June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

1 min read

AIADMK leader hacked to death near Sankarankoil

8/9/2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேல நீலிதநல்லூரில் அதிமுக பிரமுகரும், முன்னாள் மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவியின் கணவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த ஙமாவட்ட எஸ்பி வி.ஆர். ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய துணைத் தலைவி மாரிச்செல்வி இவருடைய கணவர் வெளியப்பன் (வயது 52) இவர் காலையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த போது கிராமத்தின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த பனவடலிச்சத்திரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெளியப்பன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி வி.ஆர். ஸ்ரீனிவாசன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர். வருகை தந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மேலநீலிதநல்லூர் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அதிமுக ஒன்றிய துணைத் தலைவியின் கணவர் வெளியப்பனை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தனர் என்பது பற்றி போலீஸ் ஆர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நடைபயிற்சியின் போது அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.