June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஹில்சா மீன்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வங்கதேசம் தடை

1 min read

Bangladesh bans export of Hilsa fish to India

10.9.2024
இந்தியாவில் துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் போது அதிகம் விற்பனையாகும் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியின்போது அந்நாட்டு அரசு, இந்தியாவிற்கு ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் காலகட்டத்தில், ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்து வந்தது. துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்த ஹில்சா மீன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 2019ல் 500 மெட்ரிக் டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2023ல் 3,950 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
இந்தியாவில் விற்பனையாகும் 70 சதவீத ஹில்சா மீன்கள் வங்கதேசத்தில் இருந்து தான் கிடைக்கிறது. இந்த மீன்கள் வங்கதேசத்தில் இருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படும்.
இந்த நிலையில் ஹில்சா மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வங்கதேசத்தின் இடைக்கால அரசு தற்போது தடை விதித்துள்ளது. ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.