குஜராத்தில் விநாயகர் சிலை கரைப்பு- நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் சாவு
1 min read
Ganesha statue melts in Gujarat- 4 members of the same family drown
12.9.2024
நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். அதேபோல், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் இறுதி நாளில் வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அதேவேளை, சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் முன்கூட்டியே கரைக்கப்படுகின்றன.
அந்த வகையில் குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி ஆற்றில் நேற்று மாலை சிலர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர். ஆற்றில் சிலையை கரைக்கும் போது திடீரென 7 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உடனடியாக உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டனர்.