June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியரை அருகே சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்- பெண் தீக்குளிக்க முயற்சி

1 min read

Removal of encroachment houses near Red Fort- Woman tried to set fire

19.9.2024
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே நீதிமன்ற உத்தரவுப்படி சாலை யோர ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கோட்டை அருகே புளியரை அருகே உள்ள பகவதிபுரம் பகுதிக்கு செல்லும் சாலையோரமாக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி வசித்து வந்ததாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

இதுதொ டர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற போது, அங்கு வசித்தவர்கள் கால அவகாசம் கேட்டனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. இதுதொடர்பாக மீண்டும் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பகவதிபுரத்துக்கு செல்லும் சாலையோரம் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை நேற்று வருவாய் துறையினர் மற்றும்.ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்ற ஏற்பாடு செய்தனர். இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள பார்வதி என்பவரின் வீட்டை இடிக்க முயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசித்த பார்வதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் விரைந்து சென்று, பார்வதியிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு |அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இந்த சம்பவம் அப்பகு தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.