செல்லப்பிள்ளையார்குளத்தில் கடன் பிரச்சினையால் 3 மகன்களுக்கு விஷம் கொடுத்தப் பெண்
1 min read
Woman poisoned 3 sons due to debt problem in Chelapillayarkulam
19.9.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்ல பிள்ளையார் குளம் கிராமத்தைச் சார்ந்தவர் குழந்தை வேலு. அவருடைய மனைவி உச்சிமாகாளி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர.
உச்சிமாகாளி மகளிர் சுய உதவி குழுவில் ஒன்றரை லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிபட்டார்.
இந்த நிலையில் உச்சிமாகாளி மற்றும் 3 ஆண் குழந்தைகளுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துள்ளார். இதில் ஒரு பையன் சிகிச்சை பலனின்றி இறந்தான். மற்ற மூன்று பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.