செங்கோட்டை அருகே ஊருக்குள் காட்டு யானைகள் -பொதுமக்கள் பீதி
1 min read
Wild elephants in the town near Red Fort – public panic
23.9.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நடமாடி வருகிறது. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை அதி காரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யானைகள் வனத்துக்குள் செல்ல மறுத்து அங்கேயே சுற்றி வருவதால் பொதுமக் கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட் டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகள், சிறுத்தைகள் , கரடி, காட் டெருமை, மான், மிளா, காட்டுபன்றி போன்ற வன விலங்குகள் உள்ளது.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டி வருகிறது. குறிப்பாக, செங்கோட்டை அருகேயுள்ள புளியரை, மேக்கரை, வடகரை, கடை யநல்லூர் போன்ற மலைய டிவார பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெ ருமை, பன்றி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இதனால் பயிர்கள் சேதம் ஏற்பட்டு லட்சக்கணக்கில் விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சி தலைவர், மற்றும் மாவட்ட வனத்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் வனத்துறையினர் அந்த
யானைகளை பட்டாசு வெடித்து விரட்டுகின்றனர். ஆனால் அந்த யானைகள் சில கிலோமீட்டர் தூரம் சென்று, விட்டு மீண்டும் இரவு நேரங்களில் விளைநிலங் களுக்குள் புகுந்து தென்னை, வாழை, மா, பலா மரங் களை சேதப்படுத்தி செல்வ துடன், நெற்பயிர்களையும் அழித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் உலா வர தொடங்கிவிட்டது. இதனால் விவசாயிகள் அச்சத்துடன் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வடகரையில் விளைநிலங்களில் புகுந்த 4 யானைகள் மரங்கள் மற்றும் விவசாய பியிர்களை மிதித்து துவம்சம் செய்தது. மேலும் அந்த யானைகள் செங்கோட்டை அருகே வடகரையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது அந்த யானைகளை வனத்துறையினர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனாலும் அந்த காட்டு யானைகள் மீண்டும் ஊர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை மிரட்டி வருகிறது.
மேலும் அந்த யானைக் கூட்டம் தனித்தனியாக பிரிந்து வேறு சில பகுதிகளுக்கும். சென்று விவசாய பயிர்களை நாசம் செய்து வருவது சுடந்த 4 மாதமாக தொடர்கதை யாகி வருகிறது.
நேற்று அதிகாலையில் மீண்டும் 3 யானைகள் வடகரை அருகேயுள்ள குளத்துக்கு வந்தது. இதையடுத்து உடனடியாக பொது மக்கள் வனத்து றைக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் உடன டியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்து றையினர், பொதுமக்கள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய டித்தனர்.
தென்காசி செங்கோட்டை பகுதிகளில் அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் யானைகள் சுற்றி வருவதால் மீண்டும் அவை வரக்கூடும் என்று அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.செங்கோட்டை புளியரை, மேக்கரை, வடகரை பகுதியில் அடிக்கடி ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட பிற மாவட்டங்களில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் இங்குள்ள அனுபவமுள்ள விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் இப்பகுதி யில் சுற்றித் திரியும் 17க்கும் மேற்பட்ட யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும் மலை அடிவாரத்தில் அகழி தோண்டி சோலார் மின் வேலிகள் அமைத்து விவசாயிகளின் விளை நிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.